நாகை: நாகப்பட்டினத்தில் 15 வயது சிறுமியிடம் பாலியல் கொடுமையில் ஈடுபட்ட 3 பேர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. காடம்பாடி பகுதியை சேர்ந்த சிறுமியைக் காணவில்லை என அவரது பெற்றோர் வெளிப்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். இந்நிலையில் பெற்றோரைத் தொடர்பு கொண்ட சிறுமி, தான் வேளாங்கண்ணியில் இருப்பதாக கூறியதையடுத்து பெற்றோர் அங்கு சென்று அவரை மீட்டனர். மேலும் அரசு மருத்துவமனையில் நடத்திய மருத்துவ பரிசோதனையில், சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது நிரூபணமானது.