கும்பகோணம்: கும்பகோணத்தில் கல்லூரி மாணவியை ரூ.30 லட்சம் கேட்டு கடத்தியதாக வந்த புகாரை அடுத்து போலீசார் விசாரித்து வருகின்றனர். தஞ்சை மாவட்டம் கும்பகோணம் பகுதியை சேர்ந்தவர் லதா ((18, பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் கும்பகோணம் அரசு மகளிர் கல்லூரியில் பிஎஸ்சி முதலாமாண்டு படித்து வருகிறார். நேற்றுமுன்தினம் கல்லூரிக்கு செல்வதாக கூறி சென்ற லதா இரவு நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது தாய் சித்ரா, மகள் செல்போனுக்கு பலமுறை தொடர்பு கொண்டும் லதா போனை எடுக்கவில்லை.