புதுடெல்லி: தமிழகத்தில் நடந்துள்ள சிலை கடத்தல் வழக்குகளை ஐஜி பொன்.மாணிக்கவேல் தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழு விசாரிக்க தடை விதித்து, அது தொடர்பான அனைத்து வழக்குகளையும் சிபிஐ விசாரணைக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டது. இதை எதிர்த்து டிராபிக் ராமசாமி உள்ளிட்டோர் தாக்கல் செய்த பொதுநல மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், தமிழக அரசின் உத்தரவுக்கு தடை விதித்தது. ன்.மாணிக்கவேலுக்கு கூடுதலாக ஒரு வருடம் பணி நீட்டிப்பும் வழங்கியது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. இந்த மனுவை தள்ளுபடி செய்யும்படி கோரி, டிராபிக் ராமசாமி மனு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு வரும் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வருகிறது.