ஒட்டன்சத்திரம் : ஒட்டன்சத்திரம் அருகே தூய்மை இந்தியா திட்டத்தில் கட்டப்பட்ட கழிவறை, பயன்பாட்டிற்கு வரும்முன்னே மேற்கூரை காற்றில் பறந்து சேதமடைந்தது. திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகே உள்ள தங்கச்சியம்மாபட்டி ஊராட்சியில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். ஊராட்சி அருகே நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. வீடுகளில் கழிவறை வசதி இல்லாதவர்களுக்கு ஊராட்சி அலுவலகம் எதிரே மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் 12 கழிவறைகள் கட்டப்பட்டன.