புதுடெல்லி: காஷ்மீரில் நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக விவாதிக்க பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் இன்று அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. மத்திய உள்துறை அமைச்சகம் இன்று அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. நாடாளுமன்ற நூலக அரங்கில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் காஷ்மீர் தாக்குதல் குறித்தும் அரசு இதுவரை எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்படும் என தெரிகிறது. இதனிடையே தீவிரவாத இயக்கங்களும் அவர்களுக்கு பொருளுதவி செய்தவர்களும் மிகப்பெரிய தவறை செய்துவிட்டார்கள் என்றும் இதற்கான விலையை அவர்கள் கொடுத்தாக வேண்டும் என்றும் பிரதமர் மோடி கூறியிருந்தார்.