சென்னை: போதை தகராறில் கட்டிட தொழிலாளியை சக நண்பர்களே உருட்டு கட்டையால் அடித்து கொலை ெசய்தனர்.மயிலாப்பூர் பாபநாசம் சிவன் சாலையில் காவலர் குடியிருப்பு உள்ளது. இங்கு புதிதாக கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. இதனால் வடமாநில மற்றும் தமிழகத்தை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட கட்டிட தொழிலாளர்கள் இங்கு தங்கி வேலை செய்து வருகின்றனர். ேநற்று முன்தினம் நள்ளிரவு பணி முடிந்த பிறகு, விழுப்புரத்தை சேர்ந்த கட்டுமான தொழிலாளி ஆபிரகாம் லிங்கம் (35) என்பவர் தனது சக நண்பர்கள் 2 பேருடன் கட்டுமான பணி நடக்கும் பகுதியிலேயே மது அருந்தியுள்ளார்.போதை தலைக்கேறியதும் லிங்கம், தன்னுடன் மது அருந்திய மணிகண்டன் (35) என்பவரை தரக்குறைவாக பேசியதால், இருவருக்கும் தகராறு ஏற்பட்டது.
அப்போது, லிங்கம், மணிகண்டனை அடித்தாக கூறப்படுகிறது.