மது போதை தகராறில் கட்டிட தொழிலாளி அடித்து கொலை: சக ஊழியர்கள் 2 பேர் கைது

சென்னை: போதை தகராறில் கட்டிட தொழிலாளியை சக நண்பர்களே உருட்டு கட்டையால் அடித்து கொலை ெசய்தனர்.மயிலாப்பூர் பாபநாசம் சிவன் சாலையில் காவலர் குடியிருப்பு உள்ளது. இங்கு புதிதாக கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. இதனால் வடமாநில மற்றும்  தமிழகத்தை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட கட்டிட தொழிலாளர்கள் இங்கு தங்கி வேலை செய்து வருகின்றனர். ேநற்று முன்தினம் நள்ளிரவு பணி முடிந்த பிறகு, விழுப்புரத்தை சேர்ந்த கட்டுமான தொழிலாளி ஆபிரகாம் லிங்கம் (35) என்பவர் தனது சக நண்பர்கள் 2 பேருடன்  கட்டுமான பணி நடக்கும் பகுதியிலேயே மது அருந்தியுள்ளார்.போதை தலைக்கேறியதும் லிங்கம், தன்னுடன் மது அருந்திய மணிகண்டன் (35) என்பவரை தரக்குறைவாக பேசியதால், இருவருக்கும் தகராறு ஏற்பட்டது.

அப்போது, லிங்கம், மணிகண்டனை அடித்தாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த மணிகண்டன் தனது நண்பர் அகஸ்டின் (எ) ஸ்டீபன்(45) என்பவருடன்  சேர்ந்து கற்கள் மற்றும் உருட்டுக்கட்டையால் லிங்கத்தை கடுமையாக அடித்ததால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து மயிலாப்பூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், இன்ஸ்பெக்டர் கண்ணன் சம்பவ இடத்திற்கு வந்து, லிங்கத்தின் உடலை கைப்பற்றி  பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து, கட்டுமான பொருட்கள் வைக்கப்பட்டுள்ள  குடோனில் பதுங்கி இருந்த மணிகண்டன் மற்றும் ஸ்டீபனை கைது செய்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: