புதுடெல்லி: ‘யானை சிலைகளை அமைத்ததற்கான தொகையை நீதிமன்றத்தில் செலுத்த வேண்டும்’ உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம், நொய்டாவில் 84 ஏக்கர் பரப்பளவில் 685 கோடி செலவில் பிரமாண்டமான வகையில் தலித் நினைவகம் கட்டப்பட்டது. அதில் அம்பேத்கர், கன்சிராம் உள்ளிட்ட தலைவர்களின் சிலைகளுடன் மாயாவதிக்கும் சிலை நிறுவப்பட்டது. இதில், பகுஜன் சமாஜ்வாடி கட்சியின் சின்னத்தை குறிக்கும் வகையில் 20 யானை சிலையும் நிறுவப்பட்டது. இந்த நினைவகங்கள் அமைக்கப்பட்டதில் சுமார் 1,400 கோடி வரையில் முறைகேடு நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் நேற்று பொதுநலன் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், சிலைகள் அமைக்கப்பட்ட விவகாரத்தில் மக்களின் வரிப்பணம் செலவிடப்பட்டுள்ளது. சட்ட விதிகள் அனைத்தும் மீறப்பட்டுள்ளது.