சென்னை: சென்னையில் துண்டு துண்டாக வெட்டி கொலை செய்யப்பட்ட சந்தியா, குமரி மாவட்டம் அருமநல்லூர் அருகே ஞாலம் பகுதியை சேர்ந்தவர். சந்தியா கொல்லப்பட்ட சம்பவம் அவரது உறவினர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் அளித்த தகவலை தொடர்ந்து அவரது தந்தை ராமச்சந்திரன், தாய் பிரசன்ன குமாரி ஆகியோர் சந்தியா உடலை அடையாளம்காட்ட சென்னை வந்துள்ளனர். இது தொடர்பாக சந்தியாவின் உறவினர்கள் கூறியதாவது: சந்தியா சென்னை சென்ற வேளையில் அவரை சந்தித்த பாலகிருஷ்ணன் நாம் இருவரும் சேர்ந்து வாழலாம். இந்த தகவலை நீ இப்போது யாரிடமும் கூற வேண்டாம். நம் குழந்தைகளிடம் கூட கூற வேண்டாம் என்று வற்புறுத்தி உள்ளார். இதனால் சந்தியா கணவருடன் சேர்ந்து வாழும் ஆசையுடன் இருந்தார். இதனை அப்போதே தனது பெற்றோருக்கு தெரிவித்துவிட்டார். அவர்களும் மகள் கணவருடன் சேர்ந்து வாழ இருக்கிறார் என்ற நம்பிக்கையில் இருந்தனர்.