மொனாக்கோ இளவரசருடன் பிரதமர் மோடி சந்திப்பு

புதுடெல்லி: புதுப்பிக்கக்கூடிய எரிசக்தி மற்றும் காலநிலை மாற்றத்தை எதிர்க்கொள்வது தொடர்பாக இந்தியாவுக்கு வந்துள்ள மொனாக்கோ நாட்டின் இளவரசர் ஆல்பர்ட்டுடன் பிரதமர் நரேந்திர மோடி பேச்சுவார்த்தை  நடத்தினார்.பிரான்ஸ அருகே உள்ள ஒரு குட்டி நாடு, மொனாக்கோ ஆகும். நேற்று முன்தினம் அந்நாட்டின் இளவரசர் இரண்டாம் ஆல்பர்ட் இந்திய சுற்றுப்பயணமாக டெல்லி வந்தார். ஒரு வார கால பயணமாக வந்துள்ள ஆல்பர்ட்டுடன்,  பிரதமர் மோடி நேற்று பேச்சுவார்த்தை நடத்தினார்.

இப்பேச்சுவார்த்தையில் இந்தியா - மொனாக்கோ இடையே புதுப்பிக்கக்கூடிய எரிசக்தித்துறை மற்றும் காலநிலை மாற்றத்தை  எதிர்கொள்வது ஆகியவற்றில்  கூட்டுறவை அதிகரிப்பது என்பது போன்ற விஷயங்கள்  விவாதிக்கப்பட்டன. இந்த பேச்சுவார்த்தைக்கு முன்னதாக வெளியுறவுத்துறை அமைச்சர்  சுஷ்மா சுவராஜ்ஜையும், ஆல்பர்ட் சந்தித்து பேசினார்.இந்தியாவுடன் மொனாக்கோ கடந்த 2007ல் இருந்து நட்பு நாடாக இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: