சென்னை: சென்னை நங்கநல்லூரை சேர்ந்தவர் கல்யாணராமன், வலதுசாரி ஆதரவாளரான இவர் சமூக வலைதள பக்கங்களில் அவ்வப்போது எழும் பிரச்னைகள் குறித்தும், அரசியல் சம்பந்தமான தன்னுடைய கருத்துக்களையும் முகநூல் பக்கத்தில் பதிவிடுவது வழக்கமாக கொண்டுள்ளார். கடந்த 2015, 2016ம் ஆண்டுகளிலும் தன்னுடைய முகநூல் பக்கத்தில் அவர் சார்ந்திருக்கும் மதத்தை உயர்வாகவும், பிற மதத்தை தாழ்வாகவும் பதிவு செய்து வந்துள்ளார். இதுகுறித்து அளித்த புகாரின் படி சைபர் கிரைம் போலீசார் அவரை நேற்று விமான நிலையத்தில் கைது செய்தனர்.