அமெரிக்காவில் இந்து கோயில் மீது மர்மநபர்கள் தாக்குதல்

வாஷிங்டன்: அமெரிக்காவின் லூயிஸ் வில்லி நகரில் பிரசித்திப் பெற்ற சுவாமி நாராயணன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயில் மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். கோயிலுக்குள் கருப்பு வர்ணத்தை பூசி லங்கோலப்படுத்தியுள்ளனர். மேலும் கோயிலின் ஜன்னல்களை உடைத்து சேதப்படுத்தப்பட்டுள்ளன. சுவர்களில் மோசமான வார்த்தைகளை எழுதியுள்ளனர். அங்கிருந்த நாற்காலியில் கத்தியை குத்திவைத்துள்ளனர். கோயில் அடித்து நொறுக்கி சூறையாடப்பட்ட இந்த சம்பவம் இந்திய அமெரிக்கர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதவெறுப்புணர்வு காரணமாக இது நிகழ்த்தப்பட்டு இருக்கலாம் என கருதப்படுகின்றது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: