திருவனந்தபுரம் : வெள்ளத்துக்கு பிறகு சபரிமலை கோயில் வன்முறை விவகாரம் கேரளாவுக்கு 2வது பேரழிவாக இருந்தது என்று கேரள நிதியமைச்சர் டி.எம்.தாமஸ் கூறியுள்ளார். சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் தரிசனம் செய்யலாம் என்ற உச்சநீதிமன்ற உத்தரவுக்கு எதிராக போராட்டம் நடைபெற்றது. இதையடுத்து வெள்ளம் மற்றும் வன்முறையால் சேதமடைந்தவற்றை சீரமைப்பது சவாலாக இருக்கிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.