மதுரை: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் காயமடைந்த பார்வையாளர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஜல்லிக்கட்டு போட்டியை பார்த்துக்கொண்டிருந்த போது மருது என்பவரை மாடு முட்டியது. மாடு முட்டியதில் படுகாயம் அடைந்த மருது மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.