முன்விரோத தகராறில் அண்ணன், தம்பிக்கு அரிவாள் வெட்டு: 8 பேர் கைது

பெரம்பூர்: காசிமேடு, பூண்டி தங்கம்மாள் தெருவை சேர்ந்த சகோதரர்கள் குமரேசன் (24), விக்கி என்கிற விக்னேஷ் (21). இவர்களுக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன் அதே பகுதியை சேர்ந்த லோகேஷ் என்பவருடன் ஏற்பட்ட தகராறில் முன்விரோதம் ஏற்பட்டது.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு லோகேஷூக்கு ஆதரவாக, எர்ணாவூர் சுனாமி குடியிருப்பை சேர்ந்த குள்ள கார்த்தி உள்ளிட்ட 7 பேர், வீட்டருகே நின்று கொண்டிருந்த குமரேசன், விக்கி ஆகியோரை சுற்றி வளைத்து அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் வெட்டினர். தடுக்க முயன்ற பாண்டி என்பவரையும் வெட்டிவிட்டு தப்பினர்.

இதை பார்த்த அக்கம் பக்கத்தினர், மூவரையும் மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.இதுகுறித்து விசாரித்த, காசிமேடு மீன்பிடி துறைமுக போலீசார், தனிப்படை அமைத்து, தப்பியோடியவர்களை தேடி வந்தனர்.இந்நிலையில், எண்ணூர், சின்னகுப்பத்தில் பதுங்கியிருந்த எர்ணாவூர் சுனாமி குடியிருப்பை சேர்ந்த குள்ள கார்த்திக் என்ற கார்த்திக்  (24), ராஜசேகர் (26), தமீம் அன்சாரி (21), ரமேஷ் (20), மஸ்தான், (20), சிவராஜ் (23), முகமது சதாம் (20), லோகேஷ் (18) ஆகியோரை நேற்று கைது செய்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: