சென்னை: “மோடி வருத்தப்படுகிறார், கோபப்படுகிறார் என்பதற்காகவே குடியரசு தினவிழாவில் கோட்டை அமீர் விருதை இபிஎஸ், ஓபிஎஸ் நிறுத்தியுள்ளனர்” என்று திருநாவுக்கரசர் குற்றம் சாட்டியுள்ளனர்.தமிழக காங்கிரஸ் பிற்படுத்தப்பட்டோர் துறையின் மாநில நிர்வாகிகள் பதவியேற்பு விழா சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று நடந்தது. பதவியேற்பு விழாவுக்கு ஓ.பி.சி.பிரிவு மாநில தலைவர் நவீன் தலைமை தாங்கினார். இதில் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கலந்து கொண்டு புதிய நிர்வாகிகளுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். தொடர்ந்து திருநாவுக்கரசர் அளித்த பேட்டி: முன்னேறிய வகுப்பினருக்கு 10 சதவீதம் இடம் ஒதுக்கீட்டை காங்கிரஸ் எதிர்க்கவில்லை. தேர்தலை மனதில் வைத்து கொண்டு வந்ததற்கு தான் எதிர்ப்பு தெரிவித்து வருகிறோம்.
முன்னேறிய வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு என்பது நான்கரை ஆண்டுகளுக்கு பிறகு தான் பாஜவுக்கு தெரியுமா?.