வேதாரண்யம்: நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்துக்கு எதிராக தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் சார்பில் வேதாரண்யம் பகுதியில் கடந்த 23ம்தேதி மக்கள் சந்திப்பு பிரசாரம் நடைபெற்றது. இந்நிலையில் சாலையில் நின்று பிரசாரம் மேற்கொண்டு போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியதாக பி.ஆர்.பாண்டின் மீது வேதாரண்யம், கரியாப்பட்டினம் காவல் நிலையங்களிலும் தனித்தனியே வழக்குகள் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.