கோவை: தமிழகத்தில் பொங்கல் பண்டிகை முடிந்து இதுவரை 3.7% பேர், பொங்கல் பரிசு பொருட்களான முந்திரி, திராட்சை, ஏலக்காய் வாங்கவில்லை. இந்த ெபாருட்களை திரும்ப ஒப்படைப்பது தொடர்பாக இதுவரை எந்த உத்தரவும் ரேஷன் கடைகளுக்கு வரவில்லை. சுமார் 5 லட்சம் பாக்கெட் முந்திரி, திராட்சை, ஏலக்காய் ரேஷன் கடைகளில் வைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ரேஷன் கடை பணியாளர்கள் சங்கத்தினர் கூறுகையில், ‘‘கடந்த ஆண்டும் இதே நிலைதான் இருந்தது. முந்திரி, திராட்சை, ஏலக்காய், கரும்பு துண்டுகளை வழங்கல் பிரிவு, கூட்டுறவு சங்கத்தினர் திரும்ப பெறவில்லை. மாறாக அதற்கான தொகையை ரேஷன் கடை விற்பனையாளர்களிடம் வாங்கி விட்டார்கள்.