புதுடெல்லி: ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாம் என்ற தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தீர்ப்பை நடைமுறைப் படுத்த தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என வேதாந்தா நிறுவனத்தின் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் நேற்று இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தீர்ப்புக்கு தடை விதிக்க மறுத்து உச்ச நீதிமன்றம், ஆலையை திறக்க தடை என்ற உயர் நீதிமன்றத்தின் உத்தரவு மற்றும் ஆலையை மூட பிறப்பிக்கப்பட்ட தமிழக அரசாணை ஆகியவற்றை ரத்து செய்து கடந்த 8ம் தேதி உத்தரவிட்டது. இதையடுத்து ஆலை திறக்க வேதாந்தா நிறுவனம் தொடர்ந்து முயற்சித்து வருகிறது. இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனத்தின் தரப்பில் இடைக்கால மனு ஒன்று நேற்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.