மூடப்பட்ட மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 108 பேரை அரசு மருத்துவ கல்லூரிக்கு மாற்ற வேண்டும்: திமுக கோரிக்கை

சென்னை:சென்னையை அடுத்துள்ள காஞ்சிபுரம் மாவட்டம் மணமைநல்லூரில் செயல்பட்டு வந்த பொன்னையா ராமஜெயம் மருத்துவக்கல்லூரியில் மருத்துவக் கல்வி பயில்வதற்காக சேர்ந்த மாணவர்கள், கல்லூரி மூடப்பட்டதன் காரணமாக, கல்வி தொடர இயலாத நிலை ஏற்பட்டு, அதனால் பாதிக்கப்பட்ட 108 மாணவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.இதையடுத்து, சென்னை உயர் நீதிமன்றம் பாதிக்கப்பட்ட மாணவர்கள் அனைவரையும்தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு 10 நாட்களுக்குள் மாற்ற இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு முன்மொழிவுகள் அனுப்பி நடவடிக்கை எடுக்க வேண்டுமென 13.12.2018ல் உத்தரவு பிறப்பித்தது. சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும், தமிழக அரசு இன்று வரை பாதிக்கப் பட்ட மருத்துவ மாணவர்களுக்கு இடம் ஒதுக்க நடவடிக்கை எடுக்காததால், மாணவர் களின் எதிர்காலம் கேள்விக்குறியானது.

இந்த நிலையில், தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினிடம், பாதிக்கப்பட்ட மாணவர்களும், பெற்றோர்களும் நேரில் சந்தித்து கோரிக்கை வைத்தனர். இதன் அடிப்படையில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, பொன்னையா ராமஜெயம் மருத்துவக் கல்லூரியில் பயின்ற 108 மாணவர்களின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு, தமிழ கத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் அவர்களுக்கு உடனடியாக இடம் ஒதுக் கீடு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக அரசின் தலைமைச் செயலாள ருக்கும் சுகாதாரத் துறை செயலாளருக்கும் தமிழ்நாடு எம்.ஜி.ஆர்.மருத்துவப் பல்கலைக் கழக துணை வேந்தருக்கும், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, எம்.பி., கோரிக்கை மனு எழுதியுள்ளார்.  இந்த மனுவை, தி.மு.க. தலைமை நிலையச் செயலாளர் கு.க.செல்வம், எம்.எல்.ஏ., நேற்று நேரில் தந்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: