திருவனந்தபுரம்: கேரளாவின் செம்பரிக்கா பகுதியைச் சேர்ந்தவர் தஸ்லின் என்ற முஹ்தாசிம். பாஜவின் காசர்கோடு மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளராக இருந்து வந்தார். இவருக்கு ஐஎஸ் தீவிரவாதிகளுடன் தொடர்பு இருப்பதாக தெரியவந்ததால் டெல்லி போலீசார் இவரை கைது செய்தனர். விசாரணையில், இவரது தலைமையில் 3 பேர் ஐஎஸ் தீவிரவாத இயக்கத்துடன் தொடர்பு வைத்திருந்தது தெரியவந்தது. இவர்கள் துப்பாக்கி சுடுவதில் பயிற்சி பெற்றவர்கள். இவர்கள் ஐஎஸ் இயக்கத்திடம் இருந்து ₹2 கோடி பெற்றுள்ளனர். இதை வைத்து நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்களில், கலவரத்தை தூண்டவும் திட்டமிட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரது கூட்டாளிகளும் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.