இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் உள்ள பலூசிஸ்தானில் பேருந்து ஒன்றின் மீது டீசல் லாரி மோதி தீப்பிடித்த விபத்தில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். கராச்சியில் இருந்து பஞ்ச்குர் என்ற இடத்திற்கு பேருந்து ஒன்று 40 பேருடன் சென்று கொண்டிருந்தது. பலூசிஸ்தானின் தொழில் நகரமான ஹப் அருகே சென்றபோது, எரிபொருள் ஏற்றி வந்த லாரியுடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்தில் டீசல் டேங்க் வெடித்துச் சிதறியது. இதனைத் தொடர்ந்து பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்தது.