ஏத்தன்ஸ்: மெசிடோனியா நாட்டின் பெயரை மாற்றும் உடன்படிக்கைக்கு கிரீஸ் அரசு கையெழுத்திட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மெசிடோனியா என்ற பெயரை அந்நாடு பயன்படுத்துவதற்கு கிரீஸ் நாட்டில் கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது. இந்நிலையில் மெசிடோனியா என்ற பெயரை வடக்கு மெசிடோனிய குடியரசு என்று மாற்றுவதற்கான உடன்பாட்டில் கிரீஸ் மற்றும் மெசிடோனிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் கையெழுத்திட்டனர். 27 ஆண்டுகளாக இரு நாட்டிற்கும் இடையே நீடித்து வந்த பெயர் பிரச்சனை முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது.