டமாஸ்கஸ்: சிரியாவில் ஈரான் நிலைகளை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதால் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது. இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலாத்தளமான கோலன் ஹெய்ட்ஸ் என்ற மலைப்பகுதி, மீது சிரியாவில் இருந்து ஈரானிய படைகள் ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தின. எனினும் ஏவுகணை இடைமறிப்பு மூலம் இந்த தாக்குதலை இஸ்ரேல் முறியடித்தது. இந்நிலையில் இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் சிரியாவில் உள்ள ஈரானிய புரட்சிப்படைகளை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது.