பெங்களூரு : பெங்களூரு சித்தகங்கா மடாதிபதி சிவக்குமாரசாமி மறைவுக்கு குடியரசுத் தலைவர் இரங்கல் தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடியும் மடாதிபதி சிவக்குமாரசாமி மறைவுக்கு இரங்கல் தெரிவித்தார். மேலும் ஏராளமான சமூக பணிகளை செயல்படுத்தி வந்தவர் சிவக்குமாரசாமி என்றும் மோடி கூறியுள்ளார். 111 வயதான சிவக்குமாரசாமி ஒரு மாதமாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் காலமானார். மடாதிபதி சிவக்குமாரசாமி இறுதிச்சடங்கு மாலை 4.30 மணிக்கு நடைபெறுகிறது.