திண்டுக்கல் அருகே வாட்ஸ்அப்பில் வீடியோ வைரல்... கள்ளக்காதலியுடன் சேர்ந்து மனைவியை கொல்ல முயற்சி: கணவன் உட்பட 2 பேர் கைது

திண்டுக்கல்: திண்டுக்கல், தாடிக்கொம்பு அருகே கிழக்கு காப்பிலியப்பட்டியை சேர்ந்தவர் சற்குணம் (37). கூலித்தொழிலாளி. மனைவி சரண்யா (30). கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்த  இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். சமீபத்தில் இவர்கள் திண்டுக்கல் ஆர்எம் காலனியில் குடியேறினர். சற்குணத்துக்கும், அருகிலுள்ள வீரசின்னம்பட்டியை சேர்ந்த ஈஸ்வரிக்கும்(30)  ஏற்கனவே கள்ளக்காதல் இருந்து வந்தது. இதுதொடர்பாக தம்பதிக்குள் தொடர்ந்து பிரச்னை எழுந்தது.

இதனால் ஆத்திரமடைந்த சற்குணம் நேற்று கள்ளக்காதலி ஈஸ்வரியுடன், வீட்டிற்கு வந்து சரண்யாவுடன் சண்டையிட்டு கடுமையாக தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த சரண்யா திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். புகாரின்படி திண்டுக்கல் மேற்கு போலீசார் வழக்குப்பதிந்து சற்குணம், ஈஸ்வரியை கைது செய்தனர். சற்குணமும், அவரது கள்ளக்காதலி ஈஸ்வரியும் சேர்ந்து சரண்யாவை தாக்கி கொல்ல முயற்சிக்கும் காட்சிகள் வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: