சென்னை: மைனர் பெண்ணை திருமணம் செய்த தனியார் நிறுவன ஊழியரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். சென்னை சூளைமேட்டை சேர்ந்த மாணவி இந்துமதி (17) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர், அப்பகுதியில் உள்ள பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வருகிறார். பள்ளிக்கு சென்று வரும் போது, தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் மண்ணடியை சேர்ந்த முகமது ரியாஸ் (28) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இந்த விவகாரம் மாணவியின் வீட்டிற்கு தெரியவந்தது. அவர் மைனர் என்பதால் பெற்றோர் காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில், கடந்த 8ம் தேதி மாணவி திடீரென்று மாயமானார். பல இடங்களில் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. அதன்பிறகு முகமது ரியாஸ், மாணவியை கடத்தியது தெரியவந்தது. அதை தொடர்ந்து மாணவியின் பெற்றோர் சூளைமேடு காவல் நிலையத்தில் முகமது ரியாஸ் மீது புகார் அளித்தனர். இதன்அடிப்படையில் காவல் துறையினர் மாணவியை தேடி வந்தனர். முகமது ரியாஸ் செல்போன் சிக்னலை வைத்து அவர் நாகையில் இருப்பதை போலீசார் கண்டறிந்தனர்.