அதிமுகவில் சேர ஜெ.தீபா முடிவு

கூடலூர்: அதிமுகவில் சேர்ந்து பணியாற்ற உள்ளதாக ஜெ.தீபா தெரிவித்தார். பெரியாறு அணையை கட்டிய பென்னிகுக் 178-வது பிறந்தநாள் விழா பொங்கல் விழாவாக, தேனி மாவட்டம், லோயர்கேம்பில் உள்ள அவரது மணி மண்டபத்தில் நேற்று முன்தினம் நடந்தது. விழாவில் விவசாயிகள், பல்வேறு  கட்சியினர் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர். பென்னிகுக் மணிமண்டபத்திற்கு அதிமுக ஜெ.தீபா அணி பொதுச்செயலாளர் தீபா,  கணவர் மாதவனுடன் வந்தார். தீபா கூறுகையில், ``அதிமுகவில் சேர்ந்து கட்சிப் பணியாற்ற உள்ளேன். கொடநாடு கொலை வழக்கில் யாரோ இருவர் கொடுத்த பேட்டியை மட்டும் வைத்து முடிவு செய்ய முடியாது. போலீசார் முழுமையாக விசாரணை நடத்த  வேண்டும். மேலும், கொடநாடு முன்பு யார் கைவசம் எல்லாம் இருந்ததோ அவர்களையும் விசாரணையில் ஈடுபடுத்த வேண்டும்’’ என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: