குட்கா சோதனை தொடர்பான விவரங்களை தாக்கல் செய்ய வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: குட்கா சோதனை தொடர்பான விவரங்களை தாக்கல் செய்ய வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. 2016-ல் வருமான வரித்துறை சோதனையில் லஞ்சம் வாங்கியவர்கள் பட்டியல் அம்பலமானது. பட்டியலில் உள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அரசுக்கு வருமான வரித்துறை கடிதம் அனுப்பியது. மேலும் தலைமை செயலருக்கும், டி.ஜி.பி.க்கும் வருமான வரித்துறை கடிதம் அனுப்பியது குறிப்பிடத்தக்கது.

 

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: