சென்னை: தமிழக அணியுடனான ரஞ்சி கோப்பை பி பிரிவு லீக் ஆட்டத்தில், டெல்லி அணி முதல் இன்னிங்சில் நிதானமாக விளையாடி ரன் குவித்து வருகிறது.சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்று வரும் இப்போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த தமிழகம் முதல் இன்னிங்சில் 432 ரன் குவித்து ஆல் அவுட்டானது. அபினவ் முகுந்த் 134, இந்திரஜித் 86, ரஞ்சன் பால் 78, ஷாருக் கான் 55 ரன் விளாசினர். 2ம் நாள் ஆட்ட முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 35 ரன் எடுத்திருந்த டெல்லி அணி, நேற்று நிதானமாக விளையாடி ரன் குவித்தது.