சென்னை: மெரினாவில் அமைக்கப்பட்டுள்ள எம்.ஜி.ஆர். நூற்றாண்டு வளைவை திறக்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. சென்னை காமராஜர் சாலையில் விழாக்கள் இன்றி எம்.ஜி.ஆர். நினைவு வளைவை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. திறப்பு விழா நடத்தாமல் எம்.ஜி.ஆர். நினைவு வளைவின் மேல் உள்ள திரைகளை மட்டும் அகற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. எம்.ஜி.ஆரின் பிறந்த நாளையொட்டி ஜனவரி 17-ம் தேதி அவரது நினைவு வளைவு திறக்கப்பட உள்ளது.