தண்டராம்பட்டு: தண்டராம்பட்டு அருகே நிலத்தடி நீர்மட்டம் குறைந்ததால் நெற்பயிர்கள் கருகி உள்ளன. இதனால் வயல்களில் கால்நடைகளை மேய்ச்சலுக்கு விட்டுள்ளனர். மீதமுள்ள பயிர்களை காப்பாற்ற 40 நாள் தண்ணீர் திறக்கும்படி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் அதிகளவில் நிலத்தடி நீர் பயன்படுத்தி விவசாய பணிகள் நடந்து வருகிறது. ஆனால், இந்தாண்டு பருவமழை பொய்த்ததால் கிணற்றில் நீர் இருப்பு குறைந்து வருகிறது. குறைந்த அளவிலான தண்ணீரை கொண்டு விவசாயிகள் நெல் பயிரிட்டுள்ளனர். எனினும் பல இடங்களில் போதியநீரின்றி நெற்பயிர்கள் கருகி வருகின்றன. அவற்றை காப்பாற்ற முடியாமல் கண்ணீரில் விவசாயிகள் தத்தளிக்கின்றனர். இதற்கிடையே சில விவசாயிகள் கருகிவரும் ெநற்பயிர்களில் தங்களது கால்நடைகளை மேய்ச்சலுக்கு விட்டுள்ளனர்.