திருவிடைமருதூர்: திருவிடைமருதூர் அருகே 5 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட இன்ஜினியரிங் கல்லூரி மாணவனை கொலை செய்யப்பட்டார். பெற்றோர் போலீசுக்கு தெரிவித்ததால் மர்ம நபர்கள் இந்த வெறிச்செயலை அரங்கேற்றியுள்ளனர். தஞ்சை மாவட்டம், திருவிடைமருதூர் தாலுகா ஆடுதுறை அருகே ஆவனியாபுரம் வாழைக்கொல்லை தெருவை சேர்ந்தவர் சாதிக்அலி. இவரது மகன் முன்தசீர் (19). மயிலாடுதுறையில் உள்ள தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வந்தார். நேற்று முன்தினம் தசீர் தனது நண்பனின் பிறந்தநாள் விழாவிற்கு செல்வதாக கூறி டூவீலரில் இரவு 7 மணிக்கு புறப்பட்டுள்ளார். இந்நிலையில் தாய் மும்தாஜிக்கு சுமார் 8 மணியளவில் முன்தசீர் செல்போனில் இருந்து அழைப்பு வந்தது. போனில் பேசிய நபர், `உங்கள் மகனை கடத்தி வைத்துள்ளோம். 5 லட்சம் தர வேண்டும். சற்று நேரத்தில் எந்த இடத்திற்கு வரவேண்டுமென்று தெரிவிப்போம். எக்காரணம் கொண்டும் காவல் நிலையத்திற்கு செல்லக்கூடாது’ எனக்கூறிவிட்டு இணைப்பை துண்டித்துவிட்டார். இதனால் பதறிப்போன மும்தாஜ் உறவினர்களுடன் திருவிடைமருதூர் காவல் நிலையம் சென்று புகார் அளித்தார். அவரிடம் அழைப்பு வந்த செல்போனை வாங்கி போலீசார் ஆய்வு செய்ததில், தஞ்சை மாவட்டம் திருபுவனம் பகுதியை காட்டியது. பின்னர் உறவினர்களுடன் போலீசாரும் அங்கு சென்று தேடியுள்ளனர்.