கோவை: சேலம்-சென்னை எட்டு வழிச்சாலை திட்டத்தை கைவிட பா.ம.க. பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும் விவசாய நிலங்கள் வழியே மின்கோபுரங்கள் அமைக்கக்கூடாது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட தனிச்சட்டம் இயற்ற பா.ம.க வலியுறுத்தி வருகிறது. கோவையில் நடைபெற்ற பா.ம.க பொதுக்குழுவில் 13 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. நெய்வேலியில் 3-வது சுரங்கம் தோண்டும் முடிவை கைவிட வலியுறுத்தபடும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பூரண மதுவிலக்கை அமல்படுத்தவும் பா.ம.க பொதுக்குழுவில் வலியுறுத்தப்பட்டு வருகிறது. சிவகாசி பட்டாசு ஆலையை உடனடியாக திறக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் புத்தாண்டில் 7 தமிழர்களை விடுதலை செய்ய அரசு நடவடிக்கை எடுக்க பா.ம.க வலியுறுத்தி வருகிறது. கோவை பொதுக்குழுக் கூட்டத்தில் பா.ம.க நிறுவனர் ராமதாஸ், மற்றும் அன்புமணி பங்கேற்றுள்ளனர். விவசாய நிலங்கள் வழியே மின்கோபுரங்கள் அமைக்கக் கூடாது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.