பூந்தமல்லி: பூந்தமல்லி நகராட்சிக்குட்பட்ட 21 வார்டுகளில் குப்பை சேகரிக்கும் பணிக்காக தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் பல்வேறு நடவடிக்கைகளை நகராட்சி நிர்வாகம் எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக 81 லட்சம் மதிப்பிலான குப்பை சேகரிக்கும் பேட்டரி வாகனங்கள், துப்புரவு பணிக்கான உபகரணங்களை துப்புரவு தொழிலாளர்களிடம் அமைச்சர்கள் க.பாண்டியராஜன், பெஞ்ஞமின் ஆகியோர் வழங்கினர். பூந்தமல்லி நகராட்சி அலுவலக வளாகத்தில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையர் டிட்டோ, பொறியாளர் முத்துக்குமார், சுகாதார ஆய்வாளர் வெங்கடேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.