திருமலை: ஆந்திராவில் பொருளாதாரத்தில் பின்தங்கிய மைனர் பெண்ணுக்கு பண ஆசை காண்பித்து காம களியாட்டம் நடத்தியது தொடர்பான வீடியோ சமூக வளைதளங்களில் வைரலாக பரவி வரும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதில் சம்பந்தப்பட்ட 80 வயது தெலுங்கு தேசம் பிரமுகரை கைது செய்ய பெண்கள் அமைப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் மாவட்டம், காஜுவாக்கா 63வது வார்டை சேர்ந்தவர் நல்லி சாதுராவ் (80). இவர், தெலுங்கு தேசம் கட்சியின் தொழிற்சங்க அமைப்பான தெலுங்கு நாடு டிரேட் யூனியன் கவுன்சில் நிர்வாக குழு உறுப்பினர். இவர் அந்த பகுதியில் பொருளாதார ரீதியாக பின்தங்கிய நிலையில் உள்ள குடும்ப பெண்களிடம் தனக்கு அமைச்சர்கள், எம்பி, எம்எம்ஏக்கள் அனைவரையும் நன்கு தெரியும். மாநில அரசின் மக்கள் நலத்திட்ட உதவிகளான வீடு, பென்ஷன், ரேஷன் கார்டு, வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாக கூறி தனது காம வலையில் விழ வைத்து வந்துள்ளார்.