தாம்பரம்: தாம்பரம் அருகே நேற்று முதல் 12 ஜோதிர்லிங்க தரிசன கண்காட்சியை பிரம்மகுமாரிகள் சமாஜம் தொடங்கி உள்ளது. இதன் துவக்க நிகழ்ச்சியில் திமுக எம்.எல்.ஏ எஸ்.ஆர்.ராஜா பங்கேற்றார். தாம்பரம், ராஜகீழ்ப்பாக்கம் பகுதி தனியார் திருமண மண்டபத்தில் பிரம்மகுமாரிகள் சமாஜம் சார்பில் 12 ஜோதிர்லிங்க தரிசன கண்காட்சி நேற்று துவங்கியது. இதன் தொடக்க நிகழ்ச்சியில் ஸ்ரீபெரும்புதூர் எம்பி கே.என்.ராமசந்திரன், தாம்பரம் திமுக எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜா, முன்னாள் அதிமுக எம்பி சிட்லப்பாக்கம் ராஜேந்திரன் உள்பட பலர் பங்கேற்றனர்.