வாஷிங்டன்: அமெரிக்காவில் வீடு ஒன்றில் தீப்பிடித்து தெலங்கானாவை சேர்ந்த 3 சகோதர, சகோதரிகள் பரிதாபமாக இறந்தனர். தெலங்கானா மாநிலம், நலகொண்டா பகுதியை சேர்ந்தவர் பாஸ்டர் நாயக். இவர் நலகொண்டாவில் அமெரிக்காவின் கோர்ட்டியட் தேவாலயம் உதவியுடன் கிறிஸ்தவ மதபோதகராக செயல்பட்டு வருகிறார். இவரது பிள்ளைகள் ஆரோன் நாயக் (17), ஷரோன் நாயக் (14), ஜோய் நாயக் (15) ஆகியோர் மிசிசிபியில் உள்ள பிரெஞ்சு கேம்ப் அகாடமியில் படித்து வந்தனர். இவர்கள் 3 பேரும் மெம்பிசில் உள்ள டென்னிஷி பகுதியில் உள்ள காரி கோடிரிட் என்பவரது வீட்டுக்கு கிறிஸ்துமசை கொண்டாட சென்றிருந்தனர். கடந்த சனிக்கிழமை அவர்கள் தங்கியிருந்த வீட்டில் கிறிஸ்துமஸ் அலங்காரத்தில் ஈடுபட்டிருந்தனர்.