சென்னை: சென்னையில் உள்ள திரைப்பட தயாரிப்பாளர் சங்க அலுவலகத்துக்கு வருவாய்த் துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். இருதரப்பும் சமாதானம் ஆன பிறகே அலுவலகம் திறக்கப்படும் என வட்டாட்சியர் தெரிவித்துள்ளார். தயாரிப்பாளர் சங்கத்தில் நிலவும் உச்சகட்ட மோதலை அடுத்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.