சமக புதிய நிர்வாகிகள்: சரத்குமார் அறிவிப்பு

சென்னை: சமத்துவ மக்கள் கட்சியின் புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று சரத்குமார் கூறியுள்ளார்.  சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சமத்துவ மக்கள் கட்சியின் நிர்வாக வசதிக்காக தமிழகம் முழுவதும் இரண்டு தொகுதிகளுக்கு ஒரு மாவட்டச் செயலாளர் நியமிக்கப்பட்டு வருகின்றனர்.

அதன் தொடர்ச்சியாக ராமநாதபுரம், திருவாடானை தொகுதிகளை உள்ளடக்கிய ராமநாதபுரம் கிழக்கு மாவட்டச் செயலாளராக பிரபு,  முதுகுளத்தூர், பரமக்குடி  தொகுதிகளை உள்ளடக்கிய ராமநாதபுரம் மேற்கு மாவட்ட செயலாளராக பன்னீர் செல்வம் நியமிக்கப்படுகிறார்கள். மேலும், ஆசிரியர், பட்டதாரி அணியின் மாநில துணை செயலாளராக அப்துல்பாஷித்  நியமிக்கப்படுகிறார்.  இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: