சென்னை: தமிழக மக்களின் நலனுக்காக பல விஷயங்களை செய்ய முடியாது என்று கூறி செய்யாமல் இருக்கிறார் என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கூறினார். மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், நேற்று முன்தினம் இரவு 11.30 மணிக்கு விமானம் மூலம் மதுரையில் இருந்து சென்னை வந்தார். அப்போது அவர், விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: மேகதாது பிரச்னை, கஜா புயலுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்காதது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழக எம்பிக்கள் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தியது சரியான செயல்.