பொள்ளாச்சி: கோமாரி பாதிப்பு காரணமாக மூடப்பட்ட பொள்ளாச்சி சந்தை, 2 வாரங்களுக்கு பிறகு இன்று மீண்டும் திறக்கப்பட்டது. இதில், மாடுகள் விற்பனை விறுவிறுப்பாக நடந்தது.பொள்ளாச்சி மாட்டு சந்தைக்கு, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கர்நாடகம், ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் விற்பனைக்காக அதிகளவு மாடுகள் கொண்டு வரப்படுகிறது. வாரத்தில் செவ்வாய் மற்றும் வியாழன் ஆகிய இருநாட்கள் மாட்டு சந்தை நடைபெறும். பெரும்பாலும் கேரள வியாபாரிகளே வருகின்றனர். கடந்த 2 வாரத்திற்கு முன்பு ஈரோடு, திருப்பூர், சேலம் உள்ளிட்ட பிற பகுதிகளில் மாடுகளுக்கு கோமாரி நோய் தாக்குதல் எதிரொலியாக, பொள்ளாச்சி சந்தைக்கு வெளியூர்களில் இருந்து மாடுகள் கொண்டுவந்து விற்பனைசெய்ய தடை விதிக்கப்பட்டது.