சென்னை: சென்னை மெட்ரோ ரயில் முதலாவது வழித்தட சேவை தற்போது முடியும் தருவாயில் உள்ளது. முதல் வழித்தட திட்டத்தின் இறுதியாக டிஎம்எஸ் முதல் வண்ணாரபேட்டை வரையிலான 10 கி.மீ சுரங்கப்பாதை வழித்தடத்தில் 95 சதவீத பணிகள் முடிந்துவிட்டன. தற்போது, ரயில் இன்ஜின் சோதனை ஓட்டம் நடந்து வருகிறது. குறிப்பாக, டிஎம்எஸ் முதல் வண்ணாரப்பேட்டை இடையிலான வழித்தடத்தில் ஆயிரம் விளக்கு, எல்ஐசி, அரசினர் தோட்டம், சென்னை சென்ட்ரல், உயர் நீதிமன்றம், மண்ணடி என 6 ரயில் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.