சந்திராப்பூர்: அடர்ந்த வனப்பகுதியில் தவம் இருந்த புத்த மத துறவி ஒருவர் சிறுத்தைப்புலி தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார். நாக்பூரில் இருந்து 150 கிமீ தூரத்தில், சந்திராப்பூர் மாவட்டத்தில் ராம்தேகி என்ற வனப்பகுதி உள்ளது. இந்த வனப்பகுதியில் வரலாற்று சிறப்புமிக்க புத்த மத கோயில் ஒன்று உள்ளது. இந்த கோயிலுக்கு புத்த மதத்துறவிகள் அடிக்கடி வந்து வழிபாடு நடத்திச் செல்வது வழக்கம். சமீபத்தில் ராம் வால்கே(35) என்ற புத்த மத துறவி இந்த கோயிலுக்கு வந்தார். கோயிலில் வழிபாட்டை முடித்த பிறகு சற்று தொலைவில் உள்ள ஒரு மரத்தடியில் அமர்ந்து அவர் தவம் செய்யத் தொடங்கினார். அந்த அமைதியான சூழலும் பசுமையும் அவருக்கு மிகவும் பிடித்துப் போனதால் அவர் அந்த மரத்துக்கடியிலேயே மேலும் சில நாட்கள் தவம் இருக்க விரும்பி அதன்படியே செய்தார்.