அய்சால்: மிசோரம் மாநில முதலமைச்சராக சோரம் தங்கா நாளை மறுதினம் பதவியேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. தெலங்கானா, மத்தியபிரதேசம், சத்தீஷ்கர், ராஜஸ்தான், மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் நடந்து முடிந்துள்ள சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. அதில் மத்தியபிரதேசம், சத்தீஷ்கர், ராஜஸ்தான் ஆகிய 3 மாநிலங்களில் காங்கிரஸ் முன்னிலை வகித்து வெற்றி பெற்றது. தெலுங்கானாவில் பதவிக்காலம் முடிய 9 மாதங்கள் இருந்தும் சட்டப்பேரவையை கலைத்துவிட்டு தேர்தலை எதிர்கொண்ட சந்திரசேகர் ராவ் மொத்தமுள்ள 119 தொகுதிகளில் 88 இடங்களில் வெற்றி பெற்று அம்மாநிலத்தின் முதல்வராக பதவியேறார். இதனை தொடர்ந்து 40 தொகுதிகளை கொண்ட மிசோரம் சட்டப்பேரவை தேர்தலில் மிசோ தேசிய முன்னணி கட்சி 37.6% வாக்குகளுடன் 26 இடங்களில் வெற்றி பெற்றது.