சென்னை: சென்னை தம்பு செட்டி தெருவை சேர்ந்தவர் ராஜ்குமார், வழக்கறிஞர். கடந்த சில தினங்களுக்கு முன் ராஜ்குமார் சென்னை டிஜிபி அலுவலகத்தில் ஒரு புகார் செய்தார். அதில் கூறி இருந்ததாவது: கடந்த 2016 மார்ச் 23ம் தேதி நாம் தமிழர் கட்சி சார்பில் தரமணி பஸ் நிலையம் அருகே பொதுக்கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி நிறுவனர் சீமான் தமிழ்-தெலுங்கு மொழி பேசும் மக்களிடையே பிரிவினையை உருவாக்கும் வகையில் பேசியுள்ளார். இது தற்போது யூ டியூப்பில் பரவி வருகிறது. எனவே அவர் மீது வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.