நீர்பாசன மேலாண்மை அமைப்பு சட்டத்தின் கீழ் தேர்தல் கோரிய வழக்கு : டிசம்பர் 17-ல் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

மதுரை: தமிழ்நாடு விவசாயிகள் நீர்பாசன மேலாண்மை அமைப்பு சட்டத்தின் கீழ் தற்போதைக்கு தேர்தல் நடத்த இயலாது என பொதுப்பணித்துறை செயலர் விளக்கமளித்தார். புயல் நிவாரண பணிகளில் வருவாய்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதால் தேர்தல் நடத்த இயலாது என அரசு தரப்பு கூறியுள்ளது.  ஆனால் உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் இவ்விளக்கத்தை ஏற்க மறுத்துள்ளனர். ஸ்டாலின் என்பவர் தொடர்ந்த வழக்கில் டிசம்பர் 17-ல் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: