சேலம்: தமிழக வனத்துறையில் காலியாக உள்ள வனவர், வனக்காப்பாளர், ஓட்டுநர் உரிமம் பெற்ற வனக்காப்பாளர் பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு வன சீருடை பணியாளர் தேர்வாணையம் சார்பில் நடக்க இருந்த ஆன்லைன் எழுத்து தேர்வு கஜா புயல் காரணமாக டிசம்பர் 6 முதல் 11ம் தேதி வரை நடத்தப்படுகிறது. இதன்படி வனவர் பணிக்கான எழுத்து தேர்வு டிசம்பர் 6 முதல் 9ம் தேதி வரை 4 நாள் நடக்கிறது. விண்ணப்பதாரர்கள், இன்று பிற்பகல் முதல் ஹால்டிக்கெட்டை www.forests.tn.gov.in என்ற முகவரியில் பதிவிறக்கம் செய்யலாம். வனக்காப்பாளர் மற்றும் ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர் பணியிடத்திற்கான ஆன்லைன் தேர்வு டிசம்பர் 10, 11ம் தேதியில் நடக்கிறது. இதற்கு 2ம் தேதி முதல் அனுமதி சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.