ஸ்வீடன்: ஸ்வீடனில் விமான நிலைய முனையத்தில் இருந்த கட்டிடத்தின் மீது ஏர் இந்தியா விமானத்தின் இறக்கை மோதி விபத்தில் சிக்கிய நிலையில், பயணிகள் பத்திரமாகத் தரையிறக்கப்பட்டனர். டெல்லியில் இருந்து ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோம் புறப்பட்ட ஏர் இந்தியா 167 விமானம், அந்நாட்டு நேரப்படி மாலை ஐந்தே முக்கால் மணியளவில் தலையிறங்க முயற்சித்தது. ஆனால், அங்கிருந்த கட்டிடம் ஒன்றின் மீது அதன் இடது புற இறக்கை மோதி சிதைந்தது. இருந்த போதும், 179 பயணிகளும் பத்திரமாகத் தரையிறக்கப்பட்டனர். அதே விமானத்தில் டெல்லி திரும்ப இருந்த பயணிகள் வேறு ஏர் இந்தியா விமானம் மூலம் திருப்பி அனுப்பப்பட்டனர்.