சென்னை: திருச்சியை சேர்ந்த தமிழறிஞர் ஐராவதம் மகாதேவன் உடல்நலக் குறைவு காரணமாக நேற்று சென்னையில் காலமானார். மத்திய அரசின் தொல்லியல் துறையில் இயக்குநராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் இவர், கடந்த 1987ம் ஆண்டு முதல் 1991ம் ஆண்டு வரை தமிழ் நாளிதழ் ஒன்றின் ஆசிரியராகவும் பணியாற்றியவர். தொல்லியில் துறையில் பல ஆய்வுகள் செய்து தமிழர் தொன்மை குறித்து வெளியிட்டவர். வித்யாசாகர் என்ற பெயரில் அறக்கட்டளை தொடங்கி பல்வேறு சமூக சேவைகளையும் செய்து வந்தார்.