புதுச்சேரி: புதுச்சேரி அண்ணாநகரில் தம்பதியை கொலை செய்த கொலையாளிகள் விரைவில் பிடிபடுவர் என அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். மேலும் அண்ணாநகரில் உள்ள கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை பயன்படுத்தி கொலையாளிகளை விரைவில் பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.